உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இரண்டு தனியார் வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி, இலங்கையிலுள்ள இரண்டு தனியார் வங்கிகளான சம்பத் வங்கி பிஎல்சீக்கு இருபது இலட்சம் ரூபாயும் மற்றும் டிஎப்சிசி வங்கி பிஎல்சிக்கு பத்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நிதியியல் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டம் மற்றும் 2016ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நிதியியல் நிறுவனங்களின் (வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவனம்) விதிகள் ஆகியவற்றுடன் இணங்குவதற்கு தவறியமைக்காகவே வங்கிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க