உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கல்முனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

கல்முனை பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறிக்கபட்டதையடுத்து அந்த அதிகாரங்களை வழங்குமாறு கோரி கடந்த 92 நாளாக பிரதேச செயலகத்தின் முன்னால் தொடர் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (24) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அதன் வெளிக்கதவை பூட்டி ஆயிரக்கணக்கான மக்கள் கல்முனை நகரின் 3 பிரதான வீதிகளை மறித்து 6 மணித்தியாலம் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க