இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டவிரோத முறையில் இரத்தினக்கல் அகழ்வு

நேற்று(ஜூன் 23) மஸ்கெலியா ரிகாட்டன் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் பொகவந்தலாவ மஹாஎலிய வனப்பகுதியில் சட்டவிரோத முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு இரத்தினக்கல் அகழ்விற்காகப் பயன்படுத்திய கருவிகளுடன் கைதான குறித்த சந்தேகநபர்கள் 6 பேரும் மேலதிக விசாரணைக்காக பொகவந்தலாவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த போவதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க