இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேங்காய் தலையில் விழுந்ததால் 11 மாத குழந்தை உயிரிழப்பு

கண்டி கலஹா தெல்தோட்டை நாராஹின்ன பிரதேசத்தில் 11மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் நண்பருடைய வீட்டிற்கு குழந்தையின் தந்தை அழைத்து சென்ற போது அங்குள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய் குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.

குறித்த குழந்தையின் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்டதையடுத்து தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்ற பின் அங்கிருந்து உடனடியாக பேராதனை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் குழந்தை சிகிச்சை பலனின்றி பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க