உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய நாட்டில் மருத்துவம் பயிலும் 4 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

ரஷ்யாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவமானது ரஷ்யாவிலுள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகேயுள்ள வோல்கோவ் ஆற்றில் தன்னோடு மருத்துவம் பயிலும் சக மாணவி நீரில் சிக்கியதால் அவரை காப்பாற்ற குறித்த மாணவர்கள் நீரில் இறங்கியுள்ளனர்.
எனினும் அவர்களில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்த நிலையில் மற்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க போவதாகவும் மீட்கப்பட்ட மாணவனுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும்
மொஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் தன் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க