இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையில் கைதான பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 614 கிலோகிராம் 36 கிராம் ஐஸ் மற்றும் 581 கிலோகிராம் 34 கிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் 09 பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதனடிப்படையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​குறித்த பாகிஸ்தானிய பிரஜைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டதனால்
தற்போது
பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும், தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க