உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

தற்கொலைக் குண்டுதாரிகளின் வீட்டில் மீண்டும் பகுப்பாய்வாளர்கள்

“சங்ரிலா” மற்றும் சினமொன் காடன் விருந்தகங்களில் தாக்குதல்களை நடத்திய இரண்டு சகோதரர்களின் தெமட்டக்கொட வீடு நேற்று இரசாயனப் பகுப்பாய்வாளர்களால் பரீட்சிக்கப்பட்டுள்ளது.

வாசனைத் திரவிய வர்த்தகரான மொஹமட் யூசுப் இப்ராஹிமின் இரண்டு மகன்மாரான இல்ஹாம் அஹமட், இப்ராஹிம் இன்ஸாப் அஹமட் ஆகியோரே குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்கள்.

இது தொடர்பில் அவர்களின் தந்தை, விசாரணைக்காக தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று தெமட்டகொட வீட்டில் இருந்த இரண்டு பெண்கள், மற்றும் வாசனைத் திரவிய வர்த்தகரின் மனைவி, மகள் ஆகியோரும் பகுப்பாய்வின்போது பிரசன்னமாகியிருந்தனர்

கருத்து தெரிவிக்க