இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

பல அரசியல் கட்சிகள் பஸ்களை கோரி விண்ணப்பம்:இலங்கை போக்குவரத்து சபை

மே தின பேரணியை முன்னிட்டு பல அரசியல் கட்சிகளும் பஸ்களை கோரி விண்ணப்பித்துள்ளன என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக கட்சிகளுக்கு தேவையான பஸ்களை வழங்குமாறு அனைத்து டிப்போக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.

விசேட சுற்றுலாப் பயணங்களுக்கான பஸ் கட்டணத்தின் அடிப்படையில் இவை கட்சிகளுக்காக வழங்கப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க