இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஆர்ப்பாட்டம் அல்லது வன்முறையில் ஈடுபடுவதை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் நாளை (24.04)
பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்தவொரு வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டம் அல்லது வன்முறையில் ஈடுபடுவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க