இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தம்!

தங்க கடத்தல் வழக்கில்,புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற வருகை இன்று (06.03) முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்சவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இடைநிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

கருத்து தெரிவிக்க