உலகம்சமீபத்திய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் பலத்த சூறாவளி

அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நேற்று(12) கடுமையான சூறாவளி  புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ததுடன் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியுள்ளது

இதனால் கிரேட் லேண்ட் மற்றும் சிகாகோ தெற்கு பகுதியில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் 97 ஆயிரம் பேர் இருளில் மூழ்கியுள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளது. சிகாகோ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. 2,400 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதுடன் சுமார் 2 ஆயிரம் விமானங்கள் இரத்து செய்யப்பட்டது.

மேலும் பல நகரங்களில் 2½ இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Also Readபிரான்சின் புதிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கருத்து தெரிவிக்க