புதியவைவெளிநாட்டு செய்திகள்

நேபாள பேருந்து விபத்தில் பலர் பலி

நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபாள் கஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து ஒன்று சென்று பயணித்துக்கொண்டிருந்த ,போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேரூந்து பாலத்தில் இருந்து ராப்தி என்ற ஆற்றுக்குள் விழுந்துள்ளது.

இதில் 2 இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த நாட்டின் பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு நேபாள் கஞ்சில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்து தெரிவிக்க