உலகம்

லிபியா தாக்குதலில் பங்களாதேஷ் குடியேறிகள் பலர் உயிரிழப்பு !

லிபியாவின் மிஸ்டா நகரில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் 30 குடியேறிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் பங்களாதேஷ் நாட்டையும், நான்கு பேர் ஆப்பிரிக்காவையும் சேர்ந்தவர்கள் என்று ரோய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிபியாவை சேர்ந்த ஆள் கடத்தற்காரர்களின் குடும்பத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றும், கடத்தற்காரரின் மரணத்திற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் லிபிய அரசு கூறியுள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க