உள்நாட்டு செய்திகள்புதியவை

சமூக வலைத்தளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை

சமூக வலைத்தளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் வரும் சிலர் தமது தொடர்புகளின் ஊடாக நம்பிக்கையை கட்டியெழுப்புகின்றனர்.

இதன்பின்னர் லொத்தர் ஒன்றை அறிமுகப்படுத்தி அதற்காக பணத்தை சேகரிக்கின்றனர்.

இந்த பணத்தை வங்கி கணக்கு இலக்கங்களுக்கு அனுப்புமாறு கோருகின்றனர்.

இதன்போது அனுப்பப்படும் பணமே மோசடி செய்யப்படுகிறது.

ஓக்டோபர் 5ஆம் திகதியன்று இவ்வாறான மோசடி ஒன்றின்போது நிட்டம்புவவையை சேர்ந்த ஒருவர் 270000 ரூபாவை இழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க