உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஊவா மாகாண ஆளுநரின் கட்சியினர் சஜித்துக்கு ஆதரவு

ஊவா மாகாணத்தின் 80 வீதமான உள்ளுராட்சி சபைகளது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஊவா மாகாண ஆளுநரும் ஜனாதிபதி மைத்ரி சிறிசேனவின் ஆதரவாளருமான மைத்ரி குணரட்னவின் தலைமையிலேயே ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி இயங்கி வருகிறது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின்போது இந்த ஆதரவு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கவேண்டும் என்பதில் இன்னும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி முடிவு எதனையும் எடுக்கவில்லை.

கருத்து தெரிவிக்க