உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சந்ரகுப்த தேனுவரவுக்கு மரண அச்சுறுத்தல்

கோட்டாபயவுக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த பேராசிரியர் சந்ரகுப்த தேனுவரவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் தரப்பில் இருந்தே இந்த மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தெனுவர, இலங்கையில் நீண்ட காலமாக சமூக அரசியல் செயற்பாட்டாளராக இருந்து வருகிறார்.

இந்தநிலையி;ல் கோட்டாபயவின் இரட்டை பிரஜாவுரிமை பிரச்சனையை முன்வைத்து அவரும் செயற்பாட்டாளர் காமினி வியாங்கொடவும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் வழக்கின் தீர்ப்பு கோட்டாபயவுக்கு சார்பாக அமைந்து விட்டது.

இதனையடுத்து தமக்கு பலர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக தேனுவர குறிப்பிட்டுள்ளார்.

தாம் வாகனம் செலுத்தி சென்ற வேளையில் தம்மை முந்திச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் இடம்பெற்றதாக தேனுவர குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் தமக்கு காவல்துறையினர் பாதுகாப்பை அவர் கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க