உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அரசாங்க மருத்துவர் சம்மேளனம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு

நாளை காலை 8 மணியில் இருந்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை நடத்த அரசாங்க மருத்துவர் சம்மேளனம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதனை சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நீதித்துறைக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் மேற்கொண்டமையானது தேசிய சம்பளக்கொள்கையை மீறும் செயல் என்று குற்றம் சுமத்தினார்.

கருத்து தெரிவிக்க