பொன்மொழிகள்

சிந்தனைக்கு சில துளிகள்! வள்ளலார்

  • கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் இவற்றை கனவிலும் நினைக்கக் கூடாது.
  • புகை, கள் போன்ற தீய பழக்கங்களையும் அறவே தவிர்க்கவேண்டும்.
  • பதட்டத்தோடு எச்செயலையும் அணுகுதல் கூடாது.
  • நல்லோர் மனதை நடுங்க செய்யும் காரியத்தை கைவிடுங்கள்.
  • நம்பியவர்களை நட்டாற்றில் கை கழுவி விடாதீர்கள்.
  • ஆசை காட்டி, யாரையும் மோசம் செய்யாதீர்கள். யாரையும் அவமதிக்கும் எண்ணத்தை கைவிடுங்கள்.
  • பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
  • தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள்.
  • நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள்.

கருத்து தெரிவிக்க