வெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்சில் குறுகலான மலை இடுக்கில் பாரவூர்தி கவிழ்ந்தது; 20 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே போலி நகர் அருகே கடற்கரை பகுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சிலர் தங்களது சொந்த ஊருக்கு பாரவூர்தி ஒன்றில் திரும்பி கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் ஒன்று முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர்.

தொடர்ந்து 19 பேர் காயத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

போதிய பராமரிப்புகள் இல்லாத பேருந்துகள் மற்றும் முறையான பயிற்சி இல்லாத ஓட்டுனர்களால் பிலிப்பைன்ஸ்
நாட்டில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

கருத்து தெரிவிக்க