உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘கருவை களமிறக்க கட்சி தீர்மானம் எடுக்கவில்லை’

ஜனாதிபதி தேர்தலில் சபாநாயகர் கருஜயசூரியவை களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன், சஜித் பிரேமதாசவையே நாட்டு மக்கள் கோருவதால் அவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்ற நிலைப்பாட்டிலேயே கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

” ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே எனது பிரதான கடமையாக இருக்கும்.” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையொன்றின் ஊடாக இன்று அறிவிப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில்  ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமாக இருந்தால், பங்காளிக் கட்சியின் ஆசிர்வாதமும் தனக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே ஹர்ஷ டி சில்வா மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க