உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

லியோ கழகத்தின் புதிய அங்கத்தவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் லியோ கழகத்தின் செயற்பாட்டுக்கு என புதிதாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று 15) மாலை இடம்பெற்றது.
லயன்ஸ் கழகத்தினுடைய மாவட்ட ஆளுனருடைய விசேட வரவேற்பு நிகழ்வும் மன்னார் ஆகாஸ் விருந்தினர் விடுதியில் அதன் மன்னார் தலைவர் சீ.ராமலிங்கம் தலைமையில் இடம்ப்பெற்றது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டதின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட லியோ கழக புதிய அங்கத்தவர்களான 14 இளைஞர்களுக்கு திருமதி.ராமலிங்கத்தின் ஏற்பாட்டில் சின்னம் சூட்டிவைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கழகத்தினுடைய மாவட்ட ஆளுனர் P.மகேந்திரன் முன்னைனாள் ஆளுனர்கள் மன்னார் மாவட்ட லயன்ஸ்கழக உறுப்பினர்கள் ஆலோசகர்கள் லியோ கழகத்தினுடைய தேசிய மாகாண மாவட்ட தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
குறித்த சின்னம் சூட்டும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவி ஒருவருக்கு கல்வி உதவிக்கு என துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க