உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மேலும் 5 ஆயிரம் மாதிரி கிராமங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

மேலும் 5 ஆயிரம் மாதிரி கிராமங்களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதியில் 2 ஆயிரத்து 500 மாதிரி கிராமங்களை அமைப்பதே அரசாங்கத்தின் இலக்காக காணப்பட்டது.

அதனை வருட இறுதிக்கு முன்னரே அடைய முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றையதினம் 282வது மாதிரி கிராமம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் ரன்மினிபுர எனும் பெயரில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க