உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

பொத்துவில், கடவத்தை மற்றும் ராகம ஆகிய பிரதேசங்களில் நேற்றைய தினம் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சிறுவன் ஒருவன் உட்பட மூவர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

பொத்துவில் – சியல்பலாண்டுவ பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டு இழந்து தூண் ஒன்றில் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கடவத்தை – கிரிமெட்டியாகார பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தூண் ஒன்றில் மோதியுள்ளது. குறித்த விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ராகம – ஹூணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வண்டியொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது. படுகாயமடைந்த பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க