உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பால் மா இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

செப்டம்பர் 01 முதல்,பால் மா விலை உயர்வு காரணமாக பால் மா இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த பால் மா நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

பால் மா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு கிலோ பால் மாவின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

உலக சந்தையில் பால் மாவின் விலை உயர்வின் விளைவாக, பால் மா விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக அவர்கள் பால் பவுடர் இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க