உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாகிஸ்தானியர்கள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

இலங்கைக்கு ஹெரோயின் இறக்குமதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 7 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி குறித்த நபர்களுக்கு எதிராக நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஹெரோயினை இறக்குமதி செய்தமை, அவற்றைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை முதலான 3 குற்றச்சாட்டுக்களின்கீழ் குறித்த பாகிஸ்தானியர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுள் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய 7பேரும் குறித்த 3 குற்றச்சாட்டுக்களின்கீழ், குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க