உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது

திருகோணமலை மூன்றாம் கட்டை பிரதேசத்தில் நேற்று இரவு 5 1/2 கிலோ கேரளா
கஞ்சாவுடன் நால்வரை தாம் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய
விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக திருகோணமலைக்கு வேன் ஒன்றில்
கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடன் நால்வரை கைது திருகோணமலை மாவட்ட
பிராந்திய விஷத்தன்மை யுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் விற்பனைக்கா கேரளா கஞ்சாவை திருகோணமலைக்கு
கொண்டு வந்தவர்களில் மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட் பொருட்களையும் திருகோணமலை
தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸார் வசம் ஒப்படைத்தாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க