உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கோட்டையிலிருந்து புலஸ்தி நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை

கொழும்பு – கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை இன்று (11) முதல் புதிய தொடருந்து சேவையில் ஈடுபடவுள்ளது.

இந்த ரயிலுக்கு புலஸ்தி நகர்சேர் கடுகதி தொடருந்து என பெயரிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாளாந்தம் பிற்பகல் 3.05 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்படவுள்ள தொடருந்து, இரவு 7.47 மணிக்கு பொலன்னறுவை தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளது.

மீண்டும் பொலன்னறுவையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள குறித்த தொடருந்து, காலை 9.08 மணிக்கு கோட்டையை வந்தடையவுள்ளது.

பொல்கஹவெல, குருநாகல், மஹவ, கலாவெவ, கெக்கிராவ, ஹபரண, ஹிங்குரன்கொட ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் புலஸ்தி தொடருந்து நிறுத்தப்படும் எனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க