உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ரணில் – சஜித் சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இன்று இரவு அலரிமாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர், புதிய அரசியல் கூட்டணி தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

” இன்றைய சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஓரிரு நாட்களின் பின்னர் சிறந்த முடிவு வெளியாகும்.” என்று அமைச்சர் சஜித் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க