உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

விபத்தில் சாரதி படுகாயம்

வவுனியா மடுகந்த பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் இன்று அதிகாலை ஹெப்பற்றிகொலாவ பகுதியிலிருந்து வவுனியாவிற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம்  மடுகந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனைமரத்துடன் மோதியதிலேயே குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக மடுகந்த பொலிஸார் விசாரணைக்ளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க