உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வேலைநிறுத்தம் காரணமாக தெஹிவளை மிருகக்காட்சி சாலை பூட்டு

தேசிய விலங்கியல் துறை திணைக்கள ஊழியர்கள் இன்று (6) தங்களது முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

விலங்கியல் துறை தொழிற்சங்கங்களின் கூட்டுச் செயலாளர் பிரியந்த விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்..

அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஏற்ப பணியாளர்களின் நன்மைகளை அதிகரிக்கவில்லை.

அதன்படி, தெஹிவளை மிருகக்காட்சி சாலை, பின்னவல யானை சரணாலயம் , ரிதியகம சஃபாரி பூங்கா ஆகிய இடங்களில் வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க