புதியவைவிளையாட்டு செய்திகள்

மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் இந்தியா முன்னிலை

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான  இறுதி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஜமேய்க்காவில் ஆரம்பமாகியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்று தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 416 ஓட்டங்களைக் குவித்தது.

இதனை தொடர்ந்து களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்து வீச்சாளர் பும்ராவின் அபார பந்து வீச்சினால் அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்களை இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

இந்த போட்டியில் பும்ரா ஒரு ஹெட்ரிக் உட்பட 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க