உள்நாட்டு செய்திகள்புதியவை

தமிழ் குடும்பம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழ் குடும்பம் ஒன்றை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தும் செயற்பாட்டை எதிர்த்து அவுஸ்திரேலிய மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியா மக்கள் கலந்து கொண்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகளையுடைய நடேசன், பிரியா தம்பதிகள் அந்நாட்டில் புகலிடக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையினை நிராகரித்துள்ள அந்நாட்டு அரசாங்கம் அண்மையில் இலங்கை செல்லும் விமானத்தில் குறித்த நால்வரையும் வலுக்கட்டாயமாக நாடுகடத்த நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த முயற்சி இறுதி நேரத்தில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க