வெளிநாட்டு செய்திகள்

சிரியாவின் வடமேல் பகுதியில், அமெரிக்கா வான்வழி தாக்குதல்

சிரியாவின் வடமேல் பகுதியில், அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் பயங்கரவாதிகள் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்குவைதா பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் காணப்படும் பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்கவேண்டுமென அல்குவைதா அமைப்பினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க