சினிமா

நெஞ்சம் நிமிர்த்து…

‘நெஞ்சம் நிமிர்த்து’ என்ற படத்தின் மூலம் புதுமுக நடிகர் மோகன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
‘ஜெ.ஆர். பிலிம் இண்டர்நேஷனல்’ என்ற படநிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நெஞ்சம் நிமிர்த்து.’ இந்த படத்தில் புதுமுக நடிகர் மோகன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் சாம் இம்மானுவேல்.
இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் மோகன், ஈழத்து மண்ணைச் சார்ந்தவர். குறிப்பாக முல்லைத்தீவுப் பகுதியைச் சார்ந்த கபடி விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தைப் பற்றி அறிமுக நடிகர் மோகன் கருத்து வெளியிடுகையில்,
“இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியப் பிரச்சினையாக மாறியிருக்கும் சமூகபிரச்சினை ஒன்றை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகியிருக்கிறது.
எக்சன் திரில்லர் ஜேனரில் காதல், சென்ட்டிமெண்ட், கொமடி என கொமர்ஷல் அம்சங்களுடன் தயாராகிறது. மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ஐம்பது சதவீத படபிடிப்பும், லண்டன், பாரீஸ் உள்ளிட்ட இடங்களில் ஐம்பது சதவீத படபிடிப்பும் நடைபெறுகிறது.
ஐம்பது நாள் படபிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதால் தற்போது சண்டை பயிற்சி, சிலம்ப பயிற்சி, நடிப்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்று வருகிறேன்.” என்றார்.
இதன் தொடக்கவிழா அண்மையில் சென்னையிலுள்ள சுப்பர்குட் அரங்க வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த படத்தில் நாயகனுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதியில் படபிடிப்பு தொடங்கவிருப்பதாக இயக்குநர் சாம் இம்மானுவேல் தெரிவித்தார்.
ஈழத்து மண்ணில் பிறந்து ‘நெஞ்சம் நிமர்த்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கும் கபடி விளையாட்டு வீரரான மோகனை நா அனைவரும் உற்சாகத்துடன் ஆதரிப்போம்.

கருத்து தெரிவிக்க