உள்நாட்டு செய்திகள்புதியவை

அவுஸ்திரேலியாவில் விபத்து; இலங்கை பெண் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் மொனாஸ் பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற நிசாலி பெரேரா என்ற யுவதி நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பல்கலைகழகத்தில் இருந்து மாலை வீட்டிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முற்பட்ட வேளை வேகமாக வந்த மகிழுந்தில் அடிப்பட்டு சுமார் 20 மீற்றர் தூரத்திற்கு வீசப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து சம்பவம் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் அந்நாட்டு காவல்துறை  தீவிர விசாரணைகளை முடுக்கியுள்ளது.

கருத்து தெரிவிக்க