உள்நாட்டு செய்திகள்புதியவை

கோத்தாவின் செய்தி தொடர்பாளர்களாக டலஸ் கெஹெலிய நியமனம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகபெரும மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுன தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெரமுன அமைப்பின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரமுன வருடாந்த மாநாட்டின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ஷவை அதன் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைத்தது.

கருத்து தெரிவிக்க