உள்நாட்டு செய்திகள்புதியவை

வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து குதித்து நோயாளி உயிரிழப்பு

கம்புருபிட்டி பகுதி வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவர் வைத்தியசாலை கட்டிடத்தின் 3 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நேற்று இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உயிரிழந்தவர் மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய எல். பத்மசிறி எனப்படும் இரு பிள்ளைகளின் தந்தையொருவரே என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க