உள்நாட்டு செய்திகள்புதியவை

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பில் இன்று எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்டர் யுனிவர்சிட்டி மாணவர் அமைப்பு (ஐ.யு.எஸ்.எஃப்) இன்று கொழும்பில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படுவதற்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மாணவர்கள், காவல் தடுப்புகளை கடந்துலோட்டஸ் வீதியூடாக அணிவகுத்துச் செல்ல  முயன்றதைத் தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

கருத்து தெரிவிக்க