உள்நாட்டு செய்திகள்புதியவை

பயண அறிவுறுத்தலை தளர்த்துமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை

இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயண அறிவுறுத்தலை மேலும் தளர்த்துமாறு இலங்கை ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையில் வழங்கப்பட்ட பயண ஆலோசனையை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் நீக்கியுள்ளன அல்லது தளர்த்தியுள்ளன.

இருப்பினும், பயண ஆலோசனையை ரஷ்யா முழுமையாக அகற்றவில்லை, எனவே இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்துடன் கலந்தாலோசிக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க