உள்நாட்டு செய்திகள்புதியவை

அமைச்சர் ரஞ்சன் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு உச்சநீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்ட் 28) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது, நீதிபதி சிசிர டி அப்ரூ தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதி குழு முன் துணை அமைச்சர் தமது நிலைப்பாட்டை  சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சர் ராமநாயக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது நீதித்துறைக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் மீது வணக்கத்துக்குரிய மகல்கந்த சுதந்த தேரர் மற்றும் முன்னாள் விமானப்படை அதிகாரி ஆகியோர் முறைப்பாடு அளித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க