உள்நாட்டு செய்திகள்புதியவை

தொடரூந்து மோதல்: 4 பணியாளர்கள் இடைநிறுத்தம்

கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையே இரண்டு தொடரூந்துகள் இன்று (ஆகஸ்ட் 28) நேருக்கு நேர் மோதிய சம்பவம் தொடர்பில் நான்கு தொடருந்து சேவை அதிகாரிகள் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகளில் ஒரு தொடருந்து சாரதி, உதவி இயக்குனர் மற்றும் களுத்துறை நோக்கி செல்லும் ரயிலில் இருந்த இரண்டு காவலர்கள் அடங்குவதாக தொடருந்து சேவை பொது முகாமையாளர் திலந்த பெர்னாண்டோ ஆங்கில இணைய செய்தி சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த தொடருந்து சிலாபத்தை நோக்கிச் சென்ற மற்றொரு தொடருந்துடன் மோதியது.

இந்த சம்பவம் குறித்து தொடருந்து துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க