உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மருதானை, கோட்டை இடையே இரண்டு தொடருந்து மோதி விபத்து

மருதானை மற்றும் கோட்டை தொடருந்து நிலையங்களுக்கு இடையே இரண்டு தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து காரணமாக தொடருந்து பயணங்கள் தடைப்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

மருதானையிலிருந்து களுத்துறை தெற்கு நோக்கி பயணித்த 741 இலக்கம் அடங்கிய தொடர்ந்தும், கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த 412 இலக்கம் அடங்கிய தொடருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தொடருந்து செய்தித் தொடர்பாளர் பிரிவு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க