உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

480 மில்லியன்களை இழக்கவுள்ள இலங்கை

அமரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள மிலேனியம் செலஞ் உதவியின் 480 மில்லியன் டொலர்கள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் போக்குவரத்து அபிவிருத்திக்காக இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது

எனினும் இதுவரை அது இடம்பெறவில்லை.

இந்தநிலையில் எதிர்வரும் மாதம் செப்டம்பருக்குள் இந்த நிதியை அமைச்சரவை அங்கீகரித்து உடன்படிக்கைக்கு செல்லவேண்டும்

இல்லையேல் இந்த நிதி திரும்பிப்போய்விடும் என்று அமரிக்க அதிகாரி ஜெனர் எடிமான் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிதியை ஏற்றுக்கொண்டு உடன்படிக்கைக்கு செல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகிறது

எனினும் ஜனாதிபதி இதற்கு இன்னும் உடன்படவில்லை.

இந்த உடன்படிக்கை நாட்டின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டிவருகிறார்.

கருத்து தெரிவிக்க