உள்நாட்டு செய்திகள்

மஹிந்த சமரசிங்கவுக்கும் ‘வெட்டு’ ஊடகப்பேச்சாளராக வீரகுமார

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) மாலை கூடியது.

இதன்போதே மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் உப தலைவராக செயற்பட்ட வீரகுமார திஸாநாயக்க சில மாதங்களுக்கு முன்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட மஹிந்த சமரசிங்க அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க