உள்நாட்டு செய்திகள்புதியவை

‘இராஜினாமா செய்வதாக வெளியான செய்தியில் உண்மையில்லை’

அரசியலமைப்புக்கு முரணான வகையில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி உண்மைக்கு புறம்பானவை என சபாநாயகர் கரு ஜெயசூரிய மறுத்துள்ளார்.

இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்ட சபாநாயகர் அலுவலகம்,

சில உள்ளூர் மற்றும் சமூக ஊடகங்களில் இன்று வெளியிடப்பட்ட செய்திகளில் எந்த வித ஆதாரத்தையம் மேற்கோள் காட்டவில்லை, அனுமானங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை என குறிப்பிட்டுள்ளது.

சபாநாயகர் ஒருபோதும் அத்தகைய அறிக்கைகளை வெளியிடவில்லை” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை எந்தவொரு ஜனநாயக விரோத நடவடிக்கைக்கும் எதிராக நாடாளுமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தயங்கமாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்ட பிரதமரின் “சட்டவிரோத நியமனம்” பற்றி  சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர், “இதுபோன்ற நிலை மீண்டும் எழும் என்று நம்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க