உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

களனியில் பேருந்து நடத்துனர் ஒருவர் படுகொலை

களனி பேருந்து நிலையத்திற்கு அருகில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பேருந்து நடத்துனராக பணிபுரிந்துள்ள அவரை நேற்று மாலை இனந்தெரியாத நபரொருவர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் முல்லேரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பலபிட்டிய பகுதியை சேர்ந்த 41 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் நடத்திய சந்தேகநபர் குறித்து களனி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க