கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 193 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 5ம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்ய நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அன்று முதல் இதுவரை மொத்தமாக 9 ஆயிரத்து 885 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகவியலாளர் காரியாலயம் தெரிவிக்கிறது.
கருத்து தெரிவிக்க