உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

திருகோணமலை – தம்பலாகாமம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சிறுமியை 11 மாதகாலமாக காதலித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொர்பில் சிறுமியின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க