உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இலங்கை தமிழருக்கு அவுஸ்திரேலியாவில் சிறை

தம்முடன் தங்கியிருந்த நண்பர் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக இலங்கை தமிழர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 23 வருட சிறைத்தண்டயை இன்று வழங்கியுள்ளது.

44 வயதான கணேசமூர்த்தி தியாகராஜா என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் 2017ஆம் ஆண்டு மொஹமட் மன்சூர் என்பவரை பென்பீல்ட் காடன் என்ற இடத்தில் வைத்து கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

வேலையின் பின்னர் இரண்டுபேரும் குடிபோதையில் இருந்தபோதே இந்தகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தநிலையில் தண்டனை முடிந்ததும் தண்டனையாளி நாடு கடத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கருத்து தெரிவிக்க