உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

சவேந்திர சில்வாவின் நியமனம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு கவலையை தந்துள்ளது.

சவேந்திர சில்வாவின் நியமனம் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவலைக்குரிய செய்தியை தந்துள்ளது.

அத்துடன், தேசிய நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்தக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டமை 2019இல் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழியை கேள்விக்குரியதாக்கியுள்ளது.

இந்தநிலையில் இந்த நியமனம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் விடுத்துள்ள கவலையை தமது தூதுக்குழுவும் பகிர்ந்துக்;கொள்வதாக ஐரோப்பிய தூதுக்குழு குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க